/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி
/
போலீஸ் எழுத்துத்தேர்வு 9,848 பேருக்கு அனுமதி
ADDED : நவ 09, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், போலீஸ் துறையில், 2ம் நிலை
போலீசார், 2ம் நிலை சிறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் பணிக்கான
எழுத்துத்தேர்வு, இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது.
சேலம் மாநகரில்,
4 மையங்களில் நடக்கிறது. 2,735 பேர் எழுதுகின்றனர். அதேபோல்
மாவட்டத்தில், 7 மையங்களில், 7,113 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00
முதல், மதியம், 12:40 மணிவரை தேர்வு நடக்கிறது. 'சூப்பர் செக்'
அதிகாரியான, கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், மாநகரில், 358
பேர், மாவட்டத்தில், 750 பேர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுகின்றனர்.

