sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணம் செலுத்தி ஏமாந்தோர் புகார் அளிக்க அழைப்பு

/

பணம் செலுத்தி ஏமாந்தோர் புகார் அளிக்க அழைப்பு

பணம் செலுத்தி ஏமாந்தோர் புகார் அளிக்க அழைப்பு

பணம் செலுத்தி ஏமாந்தோர் புகார் அளிக்க அழைப்பு


ADDED : மே 09, 2024 06:48 AM

Google News

ADDED : மே 09, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், அம்மாபேட்டையில் உள்ள, நகை கடை உரிமையாளர் உள்பட, 3 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அங்கு பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி அறிக்கை:வாழப்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் ரஞ்சித், 25. இவர், சேலம், அம்மாபேட்டையில் உள்ள எஸ்.வி.எஸ்., நகை கடைக்காரர்கள், முதலீடு செய்த, 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஓமலுார் அருகே சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார், 49, என்பவர், 17.35 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை இணைத்து நகை கடை உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர் முருகன், ஊழியர் பிரகாஷ் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்.வி.எஸ்., நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்கள், அசல் ஆவணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.






      Dinamalar
      Follow us