/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயிக்கு வெட்டு சித்தப்பாவுக்கு வலை
/
விவசாயிக்கு வெட்டு சித்தப்பாவுக்கு வலை
ADDED : ஜூலை 20, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: சங்ககிரி, தேவூர் அருகே கே.மேட்டுப்பாளையம், பரசுராமன் தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமகவுண்டர், 53. இவரது சித்-தப்பா பெருமாள், 72. இவர்கள் இடையே சொத்து தகராறு உள்-ளது. கடந்த, 17ல் ராமகவுண்டர், அவரது நிலத்தில் பயிரிட்டுள்ள சோளத்துக்கு தண்ணீர் எடுத்து விட, மோட்டார் அறைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த பெருமாள், கத்தியால் ராமகவுண்டரின் இடது கை மணிக்கட்டில் வெட்டினார். காயமடைந்த அவர், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, தேவூர் போலீசார், பெருமாளை தேடுகின்றனர்.