ADDED : மே 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி : வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, 4 வயதுடைய பெண் புள்ளிமான் இறந்து கிடந்தது.
வாழப்பாடி தீயணைப்பு துறையினர், வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மான் உடலை மீட்டனர். தண்ணீர் தேடி வந்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.