ADDED : செப் 23, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம், சின்னகொல்லப்பட்டியை சேர்ந்தவர்
புவனேஸ்வரன், 53. மாற்றுத்திறனாளியான இவர், கடந்த, 16ல், 'ஜூபிடர்' மூன்று
சக்கர மொபட்டில் ஆத்துாரில் இருந்து, சேலம் நோக்கிச்சென்று-கொண்டிருந்தார். புது உடையம்பட்டி சென்றபோது மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரன், சேலம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.