ADDED : பிப் 21, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல் : தலைவாசல் அருகே கல்வராயன்மலை பகுதியில் உள்ள புள்ளி மான்கள், தற்போது கோடை காலம் தொடங்கியதால் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன.
அதன்படி கல்வராயன்மலையில் இருந்து நேற்று காலை, 5:00 மணிக்கு, 3 வயதுடைய, 3 மான்கள், புத்துார், விநாயகர் நகர் ஞானவேலின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தன. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், காலை, 5:30 முதல், 8:30 மணி வரை போராடி மான்களை மீட்டனர். ஆனால் ஒரு மான் மூச்சுத்திணறி இறந்தது. மற்ற இரு மான்களை உயிருடன், கள்ளக்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

