/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி
/
ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி
ADDED : ஜூன் 01, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், மல்லமூப்பம்பட்டி, ராம கவுண்டனுார், காட்டு வளவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 38.
வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் கருப்பூர் இஸ்கான் கோவில் எதிரே உள்ள ஏரியில் துாண்டில் போட்டு மீன் பிடித்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, அப்பணியில் ஈடுபட்டார். அப்போது சேற்றில் கால் சிக்கி மூழ்கியவர் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள், மோகன்ராஜ் உடலை மீட்டனர். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.