/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து உறவினருக்கு வலை
/
தொழிலாளிக்கு கத்திக்குத்து உறவினருக்கு வலை
ADDED : டிச 28, 2024 02:26 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார், பனங்காட்டை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 27. சிற்ப தொழிலாளி. இவரது தங்கை சம்யுக்தா, 24. பசுவநத்தம்பட்டியை சேர்ந்த, மைக் செட் தொழிலாளி சிவா, 32. இவரை சம்யுக்தா காதலித்து, 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 2 வயதில் மகன் உள்ளார்.
சில நாட்களாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்-ளது. அதில் சம்யுக்தாவை, சிவா அடித்துள்ளார். நேற்று சூரியபி-ரகாஷ், தங்கை சம்யுக்தாவை, கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று, சிவா மீது புகார் அளித்தார். இன்று விசாரணைக்கு வரும்படி போலீசார் தெரிவித்-துள்ளனர்.
இந்நிலையில் சூர்யபிரகாஷ், சம்யுக்தா, பைக்கில் மல்லுார் திரும்-பிக்கொண்டிருந்தனர். மாலை, 4:30 மணிக்கு, பனங்காடு செல்லும் வழி, பெருமாள் கோவில் அருகே சென்றபோது, சூர்ய-பிரகாைஷ வழிமறித்த சிவா, கத்தியால் குத்திவிட்டு தப்பி-விட்டார்.
சம்யுக்தா, மக்கள் உதவியுடன், சூரியபிரகாைஷ மீட்டு, சீலநா-யக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். மல்லுார் போலீசார், சிவாவை தேடுகின்றனர்.