ADDED : செப் 23, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள், வரும், 26ல் சேலம் வர உள்ளனர்.
அன்று காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட-ரங்கில் சிறுபான்மையின தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்-தித்து தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோ-சித்து கருத்து கேட்கின்றனர்.
அதனால் சிறுபான்மையின கல்வி நிறுவன பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், ஆணைய குழுவினரை சந்தித்து குறைகள், சிறுபான்-மையின மேம்பாடுக்கு உரிய கருத்துகளை தெரிவித்து பயன்பெ-றலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.