ADDED : மே 27, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணி, 17. இவர் வீராணம் அருகே எம். பாலப்பட்டியில் உள்ள ஜெயராஜ் என்பவரின் விவசாய நிலத்தில், புதிய
ஆட்டுத்தொழுவம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த, 19ல் வேலை செய்து கொண்டிருந்த மணி தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.