/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்டில் சென்ற போது தவறி விழுந்த வியாபாரி பலி
/
மொபட்டில் சென்ற போது தவறி விழுந்த வியாபாரி பலி
ADDED : செப் 17, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: பேட்டரி மொபட்டில் சென்றபோது தவறி விழுந்த மஞ்சள் வியாபாரி உயிரிழந்தார்.
கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 51. மஞ்சள் வியாபாரியான இவர், கடந்த, 13ல், தன் வீட்டிற்கு பேட்டரி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.