sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

/

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை


ADDED : ஜன 03, 2025 04:00 AM

Google News

ADDED : ஜன 03, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்கு, ஊருக்கு வந்த வாலிபர், முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்-பட்டார்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சிங்கிலி-பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மகன் சஞ்சய், 22. இவர், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்காக இவர் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சஞ்சய், பெருக்காம்பாளையத்தை சேர்ந்த யஸ்வந்த், அப்பநாயக்-கனுாரை சேர்ந்த சூர்யா உட்பட 4 பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் இருந்த சஞ்சய், யஸ்வந்த் இடையே தக-ராறு ஏற்பட்டுள்ளது. இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரமாரியாக சஞ்சயை தாக்கியதில் அவர் பலத்த காயம-டைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரி-ழந்தார். சஞ்சயை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பினர்.வேலக-வுண்டம்பட்டி போலீசார், சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரி-சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியவர்களை, பரமத்தி டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். உயிரிழந்த சஞ்சய் ஊரான சிங்கிலிபட்டிக்கு அடிக்கடி யஸ்வந்த் வந்து சென்றுள்ளார். நீ ஊருக்கு வரக்கூடாது என யஸ்வந்திடம் சஞ்சய் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் சஞ்சய் முகத்தில், யஸ்வந்த் சிகரெட் புகையை விட்டதாக தெரிகிறது. இது தொடர்-பாக இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான், டாஸ்மாக் கடை அருகே சஞ்சயை, யஸ்வந்த் தரப்பினர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us