/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'
/
'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'
ADDED : மார் 18, 2024 03:21 AM
சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலம், மரவனேரியில் நேற்று வாகனச்சோதனை நடந்தது. அதை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்ட பின் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை தொகுதிகளுக்கு தலா, 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவினர், 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்து பணி நடக்கிறது.
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல், அனைத்து குழுக்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

