ADDED : ஜூலை 08, 2026 04:37 AM
அ நிறம் | அளவு
சேலம்:மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலர் பாலன் பேசியதாவது:
மயிலாடுதுறையில்
பார்த்திபன் - பிரியதர்ஷினி இறப்பு, கொலையா, தற்கொலையா என
விசாரணை நடக்கிறது. எதுவாக இருந்தாலும் காரணம் ஜாதிய நெருக்கடி
தான். இனியாவது சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி, மக்கள் மத்தியில்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜாதிய ஆணவ படுகொலை ஒரு அநீதி. அதை
தடுக்க கடும் நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
