/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்
/
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்
ADDED : நவ 26, 2024 01:33 AM
சபரிமலை பக்தர்களுக்கு
கூடுதல் சிறப்பு ரயில்கள்
சேலம், நவ. 26-
சபரிமலை பக்தர்களுக்காக, மேலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரா மாநிலம்,
ஸ்ரீகாகுலம் ரோடு - கொல்லம் சிறப்பு ரயில், நவ., 1, 8, 15, 22, 29, ஜன., 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 6:00 மணிக்கு
புறப்பட்டு, சேலம்,
ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே அடுத்த
நாள் மதியம், 2:30
மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம் - ஸ்ரீகாகுலம் ரோடு சிறப்பு ரயில், டிச., 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27 திங்கட்கிழமைகளில் மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு
போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம்
வழியே புதன்கிழமை
அதிகாலை, 2:30 மணிக்கு ஸ்ரீகாகுலம் ரோடு சென்றடையும்.
புதன்கிழமை தோறும் காலை, 8:20 மணிக்கு கிளம்பும், விசாகப்பட்டணம்-கொல்லம் சிறப்பு
வார ரயில், பிப்., 26 வரையும், வியாழக்கிழமை தோறும் இரவு, 7:35 மணிக்கு கிளம்பும் கொல்லம்-விசாகபட்டணம் சிறப்பு வார ரயில் பிப்., 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.