sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

/

செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூன் 05, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். இதுதொடர்பாக, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us