/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு நிர்வாகம் திணறி வருகிறது அ.தி.மு.க., மாவட்ட செயலர் பேச்சு
/
அரசு நிர்வாகம் திணறி வருகிறது அ.தி.மு.க., மாவட்ட செயலர் பேச்சு
அரசு நிர்வாகம் திணறி வருகிறது அ.தி.மு.க., மாவட்ட செயலர் பேச்சு
அரசு நிர்வாகம் திணறி வருகிறது அ.தி.மு.க., மாவட்ட செயலர் பேச்சு
ADDED : அக் 19, 2024 01:15 AM
ஆத்துார், அக். 19-
''தி.மு.க., ஆட்சியில், நிர்வாகம் செய்ய முடியாமல் திணறி வருவதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்,'' என, ஆத்துாரில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில், மாவட்ட செயலர் இளங்கோவன் பேசினார்.
ஆத்துாரில், நாளை, (20ல்,) அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், துணை பொதுச் செயலர் முனுசாமி பேசுகிறார். இது தொடர்பாக, ஆத்துார், நரசிங்கபுரம் நகர நிர்வாகிகளுடன் நேற்று, ஆத்துாரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் வாங்கும் வகையில், கட்சியினர் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும். பருவ மழையின்போது, நிவாரணம் உள்ளிட்ட பணிகளை, தி.மு.க., அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள், மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைந்தது. தி.மு.க., ஆட்சியில், முதல்வரின் குடும்பத்தினர் மட்டுமே பயன்பெறுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நடத்தப்படும் ஆட்சியாக உள்ளது. 10 அமாவசைக்கு பின், தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்.
தி.மு.க., ஆட்சியில் அரிசி, மளிகை, மின் கட்டணம், சொத்து, தொழில் வரி உயர்வு குறித்து பட்டியல் தயார் செய்து, அவற்றை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்க வேண்டும். நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

