sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை

/

நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை

நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை

நெய்க்காரப்பட்டி ஊராட்சியை பிரிக்க ஆலோசனை


ADDED : பிப் 16, 2025 02:57 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில், 20 ஊராட்சிகள் உள்-ளன. அதில் அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி, சேலம் மாநக-ராட்சியுடன் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநகராட்சி எல்லையிலும், சேலம் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள மற்றொரு ஊராட்சி நெய்க்காரப்பட்டி. அங்குள்ள, 12 வார்-டுகளில், 4,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 18,000க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். சிறு, குறு தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளதால், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி வருவாய் கிடைக்கிறது.மக்கள் தொகை, உள்ளூர் வரி வருவாய் அடிப்படையில், நெய்க்-காரப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க, ஊரக வளர்ச்சித்-துறை ஆலோசிக்கிறது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், '2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10,000 பேருக்கு மேல் உள்ள ஊராட்சியை, 2 ஆக பிரிக்கலாம். அப்போதே நெய்க்காரப்பட்டியில், 12,000 பேர் இருந்தனர். தவிர, உள்ளுர் வரி வருவாய் ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்-தாலும் பிரிக்கலாம்.

அதனால் நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் உள்ள, 12 வார்டுகளை, பாதி பாதியாக பிரித்து, என்.மேட்டூர், நெய்க்காரப்பட்டி என, இரு ஊராட்சியாக பிரிக்க ஆலோசித்து முன்னேற்பாடு பணி நடக்-கிறது' என்றனர்.






      Dinamalar
      Follow us