ADDED : ஜூலை 04, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
சேலம்; கூட்டுறவு வார விழா, கடந்த ஜூன், 29 முதல், வரும், 6 வரை கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி, சேலம் சுப்ரமணிய நகர் கூட்டுறவு வங்-கியில், ஏ.ஐ., தொழில்நுட்ப பயிற்சி நேற்று நடந்-தது. சேலம் சரக துணை பதிவாளர் சரவணன் தலைமை வகித்தார்.
அதில் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்-பத்தில் வங்கி செயல்பாடு, டிஜிட்டல் வங்கி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. துணை பதிவாளர் கவிதா(பயிற்சி), சேலம் மாவட்ட கூட்-டுறவு ஒன்றிய செயலாட்சியர் பூபதி உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
