/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி
/
மது ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 23, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: வி.சி., சார்பில், கள்ளக்குறிச்சியில் வரும், 2ல் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி, சேலம் மாவட்டம் ஓமலுாரில் நேற்று நடந்தது.
சேலம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் சாமுராய்-குரு தலைமை வகித்தார். அதில் அலங்கார் தியேட்டர் அருகே தொடங்கிய பேரணி, ஓமலுார் பஸ் நிலையம் வரை சென்றது. அங்கு துணை பொதுச்செயலர் வன்னியரசு, மாநாட்டு கொள்கை, மதுவிலக்கு குறித்து பேசினார். பேரணியில் திரளானோர் பங்கேற்-றனர்.