ADDED : டிச 18, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது.
கடந்த, 11ல், தொடர் மழையால், ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அன்று முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி பூங்கா, படகு சவாரிக்கு, ஆத்துார் கோட்ட வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீரானதால், நேற்று முதல், அங்கு குளிக்க சுற்றுலா பயணியருக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் ஏராளமானோர், குளித்து மகிழ்ந்தனர்.