sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியாக இருந்த மூதாட்டி கொலை நகை, பணம் திருட்டு: எஸ்.பி., ஆய்வு

/

தனியாக இருந்த மூதாட்டி கொலை நகை, பணம் திருட்டு: எஸ்.பி., ஆய்வு

தனியாக இருந்த மூதாட்டி கொலை நகை, பணம் திருட்டு: எஸ்.பி., ஆய்வு

தனியாக இருந்த மூதாட்டி கொலை நகை, பணம் திருட்டு: எஸ்.பி., ஆய்வு


ADDED : செப் 24, 2024 02:59 AM

Google News

ADDED : செப் 24, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி அருகே, கோவிந்தகவுண்டனுார் பெருமாள் மலை அடிவாரப்பகுதியில் குடியிருந்து வந்தவர் குமரி, 60. இவரது கணவர் இருசாகவுண்டர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பும், மகன் மணிகண்டன், 10 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்ட நிலையில், மூதாட்டி குமரி மட்டும், தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.அவ்வப்போது, 100 நாள் திட்டப்பணி வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த, 21 காலை, 100 மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொருவர் வீட்டுக்கு சென்று, 'டிவி' பார்த்து விட்டு வீட்டுக்கு சென்ற மூதாட்டி வெளியே

வரவில்லை. சந்தேகமடைந்து அருகில் வசிப்பவர்கள் பார்த்த போது, முகம் சிதைந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சேலம்

எஸ்.பி.,கவுதம்கோயல் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார்.அப்போது மூதாட்டியின் காதில் இருந்த தோடு, மூக்குத்தியை காணவில்லை. அதன் பட்டன் கீழே கிடந்துள்ளது. வீட்டில் ரொக்க பணம், 10 ஆயிரம் ரூபாய் காணவில்லை என, உறவினர்கள் போலீசில்

தெரிவித்துள்ளனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில்' காட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து, நகை, பணம் திருடி சென்றுள்ளனர். கொலையை மறைக்க, மூதாட்டி உடல் மீது ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின் முழு விபரம் தெரியவரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us