ADDED : டிச 30, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்-வொரு கல்வி ஆண்டிலும் படித்த முன்னாள் மாணவ, மாண-வியர், குழுவாக அமர்ந்து, பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மதியம் அனைவருக்கும் சைவ உணவுகள் பரிமா-றப்பட்டன.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யவும், மாணவர்களை நல்வழிப்படுத்த ஆக்கப்பூர்வ வளர்ச்சி பணி மேற்-கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

