/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு
/
ஆந்திரா தக்காளி வரத்தால் கிலோ ரூ.12 ஆக சரிவு
ADDED : ஜூன் 15, 2025 02:22 AM
தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.
இதுகுறித்து தலைவாசல் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
மார்க்கெட்டில் கடந்த வாரம், 17 கிலோ பெட்டி தக்காளி, 350 ரூபாய்; 24 கிலோ பெட்டி தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றது. சில்லரை விற்பனையில் கிலோ, 18 முதல், 20 ரூபாயாக இருந்தது. ஒரு வாரமாக ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், 17 கிலோ பெட்டி தக்காளி, 200 முதல், 250 ரூபாய்; 24 கிலோ பெட்டி, 400 ரூபாய் என, பெட்டிக்கு, 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் சில்லரை விலையில் கிலோ, 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.