ADDED : ஜூலை 14, 2025 04:02 AM
வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம், மேற்கு ராஜாபாளையத்தை சேர்ந்-தவர் சூர்யா, 28. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, 3 மாதங்களுக்கு முன் திருமணமானது.
தொடர்ந்து தம்பதியர், வாழப்பாடி, புதுப்பாளையத்தில் வாட-கைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, தம்பதியர், மேற்கு ராஜாபாளையம் சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு, புதுப்பாளையம் வழியே சென்ற பால்காரர், சூர்யா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி-ருப்பதை பார்த்தார். தொடர்ந்து சூர்யாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது, இரு வாட்ச் உள்ளிட்ட சில பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.
அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்க-னவே, 3 ஆண்டுக்கு முன் அதே வீட்டில் ஒரு நீதிபதி தங்கியி-ருந்தார். அப்போதும் மர்ம நபர்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றனர்.