sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு; ரூ.1.26 லட்சம் பறிமுதல்

/

ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு; ரூ.1.26 லட்சம் பறிமுதல்

ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு; ரூ.1.26 லட்சம் பறிமுதல்

ஆர்.டி.ஓ., ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு; ரூ.1.26 லட்சம் பறிமுதல்


ADDED : செப் 24, 2024 08:00 PM

Google News

ADDED : செப் 24, 2024 08:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின்படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீசார் அலுவலக வழிப்பாதை, வெளிப்புற பகுதிகளை பூட்டிவிட்டு சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதியின் 'ரெனால்டு - டஸ்டர்' கார், அலுவலகம் வளாக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணியாளர்களின் மொபட், பைக் உள்ளிட்டவையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, ஆர்.ஓ., வாட்டர், பேட்டரிகளின் மேற்புற பெட்டிகள் மீது பணக்கட்டுகளும் மற்றும் வளாக பகுதியில், சிதறிய நிலையில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இதில், மொத்தம் ஒரு லட்சத்து, 26,500 ரூபாய் இருப்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த பணம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலக பணியாளர்களிடம் விசாரித்தனர். மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு, 9:00 மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்தது.






      Dinamalar
      Follow us