/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கே.மோரூரில் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு
/
கே.மோரூரில் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு
ADDED : செப் 22, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி: காடையாம்பட்டி, கே.மோரூரில் ஒரு பிரிவை சேர்ந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
அப்போது எதிரே பைக்கில் வந்த மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள், ஊர்வலத்தில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதையடுத்து, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார், தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்து பேச்சு நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, இரவு முதல் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.