sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு

/

முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு

முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு

முன்னாள் நீதிபதி மறைவு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு


ADDED : ஜூன் 07, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மறைந்த முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் உடலை, காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஜனார்த்தனம், 89, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக, 2006 முதல் 2015ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்துள்ளார்.

இவரது பரிந்துரையின்படி, தமிழகத்தில் சிறுபான்மையினர், அருந்ததியர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு உள்ளது. சமூக நீதி வரலாற்றில் தன் முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர். அவரது மறைவு சமூக நீதித் துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு. ஜனார்த்தனம், நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில், அவரது இறுதி நிகழ்வு, காவல் துறை மரியாதையுடன் நடத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us