/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு
/
பக்தர்களுக்கு ரூ.1 நாணயம் வழங்க ஏற்பாடு
ADDED : ஏப் 13, 2025 05:15 AM
சேலம்: சேலம், குரங்குச்சாவடி அய்யப்ப ஆசிரமத்தில், சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்த ஒரு ரூபாய் காசு, லட்டு, 25,000 பக்தர்களுக்கு, நாளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரம தலைவர் நட்ராஜ் கூறியதாவது:
தமிழ் புத்தாண்டன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்-பட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிேஷகத்துக்கு பின், கோவில் முழுதும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.
இரவு, 7:00 மணிக்கு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழ பூஜை, மகா தீபாராதனை நடக்கும். இதில் அய்யப்பன் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம், லட்டு, 25,000 பக்தர்களுக்கு, இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்-டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

