/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலைத்திருவிழா: 2,000 மாணவியர் ஆர்வம்
/
கலைத்திருவிழா: 2,000 மாணவியர் ஆர்வம்
ADDED : ஆக 13, 2025 07:24 AM
சேலம்: கலைத்திருவிழாவில், 2,000 க்கும் மேற்பட்ட மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான கலைத்திருவிழா போட்டி நடந்து வருகிறது. அதன்படி சேலம், குகை மூங்கப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2 நாள் கலைத்திருவிழா நேற்று தொடங்கியது. ஓவியம், கோலம், பானை ஓவியம், மணல் சிற்பம், காய்கறி சிற்பம், களி மண் சிற்பம் போன்ற கலை திறமை
களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியர், திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று நாட்டியம், நாடகம் உள்ளிட்ட இசை போட்டிகள் நடக்கின்றன. பள்ளி அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவியர், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

