/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு
/
அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு
ADDED : பிப் 11, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று, தை மாத வளர்பிறை சோம-வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத வளர்பிறை சோமவார
பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம்
அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி ஆகிய-வற்றிற்கு, பால், பன்னீர்,
அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்-சாமிர்தம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு
அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள்,
'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் வழிபட்டனர்.