/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்
/
பொதுத்தேர்வில் அசத்த லட்சுமி ஹயக்ரீவ யாகம்
ADDED : பிப் 17, 2025 02:13 AM
வீரபாண்டி: பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்-ரீவ யாகம் நேற்று நடந்தது.
முன்னதாக மகா கணபதி, தன்வந்திரி, மகா சுதர்சன யாகங்கள் நடத்தி, இறுதியாக லட்சுமி ஹயக்ரீவ யாகம் செய்யப்பட்டது. ஏராளமான மாணவர்கள், பெற்றோருடன் பங்கேற்றனர். மாணவர்-களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த ரட்சை கயிறு, பேனா வழங்-கப்பட்டன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல் சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை, மகளிர் குழு சார்பில், 13ம் ஆண்டாக, அம்மா-பேட்டை பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, லட்சுமி ஹயக்ரீவ யாகம் நடந்தது.

