/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரிமையாளர் மீது தாக்குதல்: மூன்று பேரிடம் விசாரணை
/
உரிமையாளர் மீது தாக்குதல்: மூன்று பேரிடம் விசாரணை
ADDED : பிப் 02, 2026 06:24 AM
சேலம்; சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, வீரபாண்-டியார் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்பால்சிங் என்பவர், கதவு தயாரிக்கும் நிறு-வனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது இஷான், சாஜன் உள்ளிட்ட மூவர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், உரிமையாளர் ஜஸ்பால்சிங்-குடன், மூவருக்கும் முன் விரோதம் இருந்துள்-ளது. மேலும் அதிக சம்பளம் கேட்டு கடந்த, 30ல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து, அருகில் இருந்த இரும்பு சுத்தி மூலம் ஜஸ்-பால்சிங் தலை மற்றும் பல்வேறு இடங்களில் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த ஜஸ்-பால்சிங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

