sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி ஏற்றி கொல்ல முயற்சி; மேலும் 3 பேர் மீது வழக்கு

/

லாரி ஏற்றி கொல்ல முயற்சி; மேலும் 3 பேர் மீது வழக்கு

லாரி ஏற்றி கொல்ல முயற்சி; மேலும் 3 பேர் மீது வழக்கு

லாரி ஏற்றி கொல்ல முயற்சி; மேலும் 3 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 21, 2025 07:20 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், அம்மம்பாளையம், நடுத்தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி அனிதா, 36. இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரவி மனைவி அன்பரசிக்கும் இடையே, வீட்டின் எதிரே குப்பை கொட்டுதல், கான்கிரீட் சாலையில் கார் நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், அன்பரசியின் மகன் பூபதிக்கு ஆதரவாக, அவரது நண்பர் பாலமுருகன், லாரியை எடுத்து வந்து அனிதா வீட்டின் எதிரே நிறுத்தியிருந்த கார் மீது மோதினார். அப்போது லாரி முன் தடுக்க முயன்ற பெண்கள் உள்ளிட்டோர் மீது, லாரியை வேகமாக ஏற்ற வந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

இதில் காயமடைந்த அனிதா, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, பாலமுருகன் மீது, ஆத்துார் ஊரக போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து நேற்று, அன்பரசி, பூபதி, உறவினர் கதிரவன் மீதும் கொலை முயற்சி, பொது சொத்து சேதம் உள்பட, 4 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us