/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்
/
மோசடி நிறுவனத்தின் நகை, பொருட்கள் ஏலம்
ADDED : டிச 31, 2025 05:28 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், மோசடியில் ஈடுபட்ட பேபி ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையும் சொத்து
களான தங்கம், வெள்ளி நகைகள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது ஏலம் விடப்பட்-டன. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமை வகித்து ஏலத்தை நடத்தினார்.
முன்வைப்பு தொகை செலுத்திய, 17 பேர் பங்-கேற்றனர். அவர்களில் துரைராஜ் என்பவர், 140.030 கிராம் தங்க நகைளை, 6.83 லட்சம் ரூபாய்க்கும், 121.290 கிராம் வெள்ளி ஆபரணங்-களை, 14,800 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தார். அதேபோல் ஜஸ்ட்வின் ஐ.டி., டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான, 16 'ஏசி' மெஷின்களை, 87,700 ரூபாய்க்கு தண்டபாணி என்பவரும், 21 கணினி-களை, 6,900 ரூபாய்க்கு, சீனிவாசன் என்பவரும் ஏலம் எடுத்தனர்.

