ADDED : ஜூலை 23, 2026 01:29 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: 'வீ தி லீடர்' சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆத்துாரில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணமா-லையின் அமைப்பான, 'வீ தி லீடர்' சார்பில் நேற்று போதை-பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.
அப்போது, போதையில்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்று சேர்வோம் என்று கோஷம் எழுப்பியும், போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பதாகைகள் ஏந்தியும் பேரணி சென்-றனர். ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, ராணிப்பேட்டை, கடைவீதி, காமராஜர் சாலை வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
