sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு

/

பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு

பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு

பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு


ADDED : ஜன 07, 2025 01:57 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறந்து சில மணி நேரமானஆண் சிசு சாக்கடையில் வீச்சு

கெங்கவல்லி,கெங்கவல்லியில், பிறந்து சில மணி நேரமான ஆண் சிசுவை சாக்கடையில் வீசிய நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டு, சப்பாணி தெருவில் உள்ள சாக்கடையில் நேற்று, மாலை, 4:00 மணியளவில் தொப்புள் கொடியுடன் குழந்தை கிடந்தது. அங்கு காகம், நாய்கள் சுற்றித்திரிந்ததால், பொதுமக்கள் பார்த்தனர். அப்போது, ஐந்து மாதம் கொண்ட ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கெங்கவல்லி போலீசார், ஆண் சிசு உடலை மீட்டு பிரேத சோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கடையில் சிசுவை வீசிச் சென்ற நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கருவில் ஐந்து மாத வளர்ச்சியில் இருந்த சிசுவை பிறந்தவுடன் சாக்கடையில் வீசியுள்ளனர். இவை, கருக்கலைப்பு செய்தபோது, இறந்த நிலையில் பிறந்திருக்க கூடும். இந்த சிசுவை, சாக்கடையில் வீசிய நபரை தேடிவருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us