ADDED : ஜன 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொ.மு.ச., கொண்டாட்டம்
சேலம், :காணும் பொங்கலையொட்டி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தொ.மு.ச. சார்பில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மெய்யனுார் கிளை சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கவுன்சில் தலைவர் மணி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்றார். அதில் பொங்கல் வைத்து, போக்குவரத்து தொழிலாளர்கள், மக்களுக்கு வழங்கப்பட்டது. தொ.மு.ச., மத்திய சங்கத்தலைவர் ஸ்ரீதர், பொதுச்செயலர் மனோகரன், பொருளாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.