ADDED : ஜூலை 20, 2026 01:13 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, பனந்தோப்பை சேர்ந்தவர் துரை. இவர், மலை கரடு அடிவாரத்தில் உள்ள விவசாயத்தோட்-டத்தில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, அவரது ஆட்டுப்-பட்டி அருகில், கரடி வந்துள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரி-வித்தார். இதை அறிந்து, அங்கு, தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், கரடி காலடித்தடம் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடு-பட்டுள்ளனர்.
