ADDED : நவ 10, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுதல் வகுப்பறை
கட்ட பூமி பூஜை
ஆத்துார், நவ. 10-
ஆத்துார் அருகே சொக்கநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு நபார்டு நிதி உதவி திட்டத்தில், 2.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஆத்துார் ஒன்றிய குழு தலைவர் பத்மினிபிரியதர்ஷினி தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் விமலாதேவி, ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.