/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
ADDED : செப் 21, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 21. இவர், 17 வயது சிறுமியை, காதலித்தார். தொடர்ந்து இரு வீட்டு பெற்றோர் சம்ம-தத்துடன், 2023 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். சிறுமி, 8 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கடந்த, 17ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், 17 வயது என்பதால், மருத்துவர்கள், ஆத்துார் மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போலீசார், வெங்-கடேஷ், அவரது பெற்றோர், உறவினர் என, 4 பேர் மீது குழந்தை திருமணம், 'போக்சோ' வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.