/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவரில் அடித்து சிறுவன் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது
/
சுவரில் அடித்து சிறுவன் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது
சுவரில் அடித்து சிறுவன் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது
சுவரில் அடித்து சிறுவன் கொலை: தாய், கள்ளக்காதலன் கைது
ADDED : ஜன 26, 2025 03:52 AM
சேலம்: சுவரில் அடித்து சிறுவனை கொன்ற விவகாரத்தில் அவனது தாயிடம் போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக அப்பெண்ணின் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் குகையை சேர்ந்த, டிரைவர் பசுபதி, 26. இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு வெற்றிவேல், 6, மாறன், 4, என, இரு குழந்தைகள் உள்ளனர். கிச்சிப்பாளையம், காளிகவுண்டர் ஹவுசிங் போர்டை சேர்ந்த தமிழரசன், 22, என்பவருக்கும், சண்-முகப்பிரியாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு ஏற்பட்டதில் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் சண்முகப்பி-ரியா, தமிழரசனுடன் வசித்தார்.இரு நாட்களுக்கு முன், பைக்கிலிருந்து மாறன் விழுந்து தலையில் அடிபட்டதாக கூறி, மகனை, சேலம் அரசு மருத்துவம-னையில் சண்முகப்பிரியா சேர்த்தார். உறவினர்கள் சந்தேகம் அடைந்து, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், இரவில் மாறன், அடிக்கடி அழுது தொந்தரவு செய்துள்ளான். அதில் கோபம் அடைந்த தமிழரசன், சிறுவனை சுவரில் அடித்துள்ளார். அதில் மயங்கிய சிறுவனை, பைக்கில் இருந்து விழுந்ததாக கூறி, மருத்துவமனையில் சேர்த்-தது தெரிந்தது.
இதனால் கொலை முயற்சி வழக்குப்பதிந்த போலீசார், தமிழர-சனை கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே இரு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்-தினம் சிறுவன் உயிரிழந்தான். இதனால் கொலை வழக்காக மாற்-றிய போலீசார், அதற்கு உடந்தையாக இருந்த சண்முகப்பிரியா-வையும் கைது செய்தனர்.

