/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சலகத்தில் மோசடி சிக்கிய கிளை அலுவலர்
/
அஞ்சலகத்தில் மோசடி சிக்கிய கிளை அலுவலர்
ADDED : செப் 09, 2025 01:42 AM
மேட்டூர், அஞ்சல் சேமிப்பு கணக்கிலிருந்து, பணம் எடுத்து மோசடி செய்த கிளை அலுவலர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கொளத்துார், அண்ணாநகரை சேர்ந்த செல்வி ஜீவா, 33, மாசிலாபாளையம் கிளை அஞ்சல் நிலையத்தில் அலுவலராக கடந்த, 2018 மார்ச் 19 முதல், 2023 ஜன., 23 வரை வேலை செய்தார். மாசிலாபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர், அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.
அதில் கமலா, பெரியம்மாள், ஞானகண்ணு, மேரிசாய்ஸ், சரவணகுமார், அந்தோணியம்மாள் சேமிப்பு கணக்கில் இருந்து தலா, 32,400 ரூபாய், 54,500, 29,500, 36,500, 16,500, 14,000 ரூபாய் என மொத்தம், 2,06,400 ரூபாய் பணத்தை சேமிப்பாளர்களுக்கு தெரியாமல் எடுத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த சேமிப்பாளர்கள், மேட்டூர் தலைமை அஞ்சல் அலுவலரிடம் புகார் செய்தனர்.
விசாரணை நடத்திய மேட்டூர் தலைமை தபால் அலுவலக ஆய்வாளர் ராஜேஷ், 38, நேற்று மதியம் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். ஜீவா செய்த மோசடி குறித்து மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.