UPDATED : ஏப் 11, 2025 03:04 AM
ADDED : ஏப் 11, 2025 01:21 AM
வாழப்பாடி:வாழப்பாடி அருகே ஏரியில் மீன் பிடித்தபோது, தவறி விழுந்த தம்பியும், அவரை காப்பாற்ற முயன்ற அண்ணனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சேலம்
மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம், ஒட்டப்பட்டியை சேர்ந்த
ராஜேந்திரன் --- சந்தியா, தம்பதிக்கு தர்ஷன், 8, விஷால், 7 ஆகிய மகன்கள்
இருந்தனர். அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், இருவரும் முறையே 3,
2ம் வகுப்பு படித்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு
சகோதரர்கள், சந்தனப்புடையார் ஏரிக்கு, நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது, ஏரி பள்ளத்தில் விஷால் தவறி விழுந்தார்.
அவரை காப்பாற்ற
முயன்ற தர்ஷனும், பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினார். தீவிர
தேடுதலுக்கு பிறகு மாலை, 6:00 மணிக்கு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

