sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு

/

புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு

புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு

புதுமாப்பிள்ளை கொடூர கொலை: ஊட்டியில் தம்பதி சுற்றிவளைப்பு


ADDED : ஜன 11, 2024 10:59 AM

Google News

ADDED : ஜன 11, 2024 10:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் தியாகு, 26. கட்டட தொழிலாளி. இவருக்கு, 4 மாதங்களுக்கு முன் திருமணமானது. சமீபத்தில் சேலம், ஜாகீர்காமநாயக்கன்பட்டி, பூனைக்கரட்டை சேர்ந்த அய்யம்பெருமாள், 51, வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

கடந்த, 3 இரவு, வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர், மறுநாள் கழுத்து மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சூரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றினர்.

இதையடுத்து, அங்கு தொழிலாளியை வாடகைக்கு அமர்த்திய பாலகிருஷ்ணன், வரலட்சுமி ஜோடி தலைமறைவாக, போலீசார் தேடினர். அதே நேரம் கொலையில் தொடர்புடைய சுரேஷ், துறையூரில் பதுங்கி இருப்பது கண்டுபிடித்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது வாக்குமூலப்படி ஊட்டி மலையடிவாரம், வெள்ளியங்காடு காரமடையில் இருந்த பாலகிருஷ்ணன், 27, அவரது மனைவி வரலட்சுமி, 20, ஆகியோரை, நேற்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us