ADDED : நவ 19, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர்கள் சக்திவேல், ஐயப்பன். இவர்கள் இடையே கடந்த அக்., 23ல், சிறுவாச்சூர் வழியே செல்லும் தனியார் பஸ்சில் சென்றபோது, தகராறு ஏற்பட்டது. பின், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் இரு தரப்பை சேர்ந்த, 6 பேர் காயம் அடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சக்திவேல், ஐயப்பன் புகாரில், தலா, 10 பேர் மீது, தலைவாசல் போலீசார், 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அதில் ஐயப்பன் புகாரில், சிறுவாச்சூரை சேர்ந்த, கவுதம், 19, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.

