sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

/

பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி

பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி


ADDED : மார் 05, 2025 07:50 AM

Google News

ADDED : மார் 05, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையில் இருந்து பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி காலனி, நான்கு ரோடு, நம்பியாம்பட்டி, சந்தைப்பேட்டை, மகுடஞ்சாவடி, சங்ககரி வழியே ஈரோடு வரை, பஸ் இயக்கப்பட்டது.

15 ஆண்டுக்கு முன், இந்த பஸ் நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் அவதிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் மக்கள் கோரிக்கையால், நேற்று முன்தினம் முதல், அந்த தடத்தில் அரசு பஸ், தடம் எண்: 30, காலை, மாலையில், மாணவர்கள் பயன்பெறும்படி இயக்கப்படுகிறது.

இதனால் ஊர்மக்கள் நேற்று, பஸ்சுக்கு வாழை மரம், மாலையை கட்டிவிட்டனர். பின் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புத்துார் தலைவாசல் அருகே புத்துாருக்கு, பள்ளி நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் சங்கரய்யா, ஊர்மக்கள், கடந்த மாதம் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், அமைச்சர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர். இதையடுத்து ஆத்துார் முதல், தலைவாசல் வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்(தடம் எண்: 35), நேற்று முதல், புத்துார் கிராமத்துக்கு நீட்டித்து இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், பட்டாசு வெடித்து பஸ்சை வரவேற்றனர். பின் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us