sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை வேலைக்காரர் மீது தொழிலதிபர் புகார்

/

வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை வேலைக்காரர் மீது தொழிலதிபர் புகார்

வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை வேலைக்காரர் மீது தொழிலதிபர் புகார்

வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை வேலைக்காரர் மீது தொழிலதிபர் புகார்


ADDED : நவ 07, 2024 01:10 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் ரூ.40 லட்சம் கொள்ளை

வேலைக்காரர் மீது தொழிலதிபர் புகார்

சேலம், நவ. 7-

சேலம், அழகாபுரம், ஸ்வர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் ராகுல் பாட்டியா, 29. இவர், தந்தையுடன் சேர்ந்து குகை பகுதியில் துணி ஏற்றுமதி தொழில் செய்கிறார். கடந்த, 31ல் தீபாவளியையொட்டி பெங்களூரில் உள்ள மாமா வீட்டுக்கு சென்ற ராகுல் பாட்டியா, கடந்த, 3ல் திரும்பி வந்தார்.

இவர்களது வீட்டில் பீகாரை சேர்ந்த சந்தானகுமார், 21, வேலை பார்த்து வருகிறார். அவர் இரவில், ராகுல் பாட்டியா வீட்டிலேயே படுத்துக்கொள்வார்.

இந்நிலையில் ராகுல் பாட்டியா நேற்று அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், 'கடந்த, 3 இரவு அனைவரும் துாங்கிய பின், பீரோ சாவியை எடுத்து திறந்து அதிலிருந்த, 40 லட்சம் ரூபாயை, சந்தானகுமார் திருடி சென்றார்' என கூறியிருந்தார். அதேநேரம், 40 லட்சம் ரூபாய்க்கு உரிய கணக்கு வழக்குகளை காட்டும்படி ராகுல் பாட்டியாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சந்தானகுமாரை காணாததால் அவரையும் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us