நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி போலீசார், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரிடம் சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில் ஒடிசா மாநிலம் பாலங்கிர் பகுதியை சேர்ந்த ராஜ்கிேஷார் நாக், 27, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.