sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

210 கிலோ போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்து; வடமாநிலத்தவரிடம் விசாரணை

/

210 கிலோ போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்து; வடமாநிலத்தவரிடம் விசாரணை

210 கிலோ போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்து; வடமாநிலத்தவரிடம் விசாரணை

210 கிலோ போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்து; வடமாநிலத்தவரிடம் விசாரணை


ADDED : டிச 20, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 20, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், கேரளா பதிவெண் கொண்ட ஹூண்டாய் கார் நேற்று மதியம், வேகமாக சென்று கொண்டிருந்தது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே, ஒரு வழி பாதை வழியாக வரும்போது, எதிரே பைக்கில் வந்த மூவர் மீதும், நடந்து சென்றவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அப்பகுதி மக்கள் நான்கு பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், காரின் டயர் வெடித்ததில் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நின்றது. அப்போது காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். அப்பகுதி மக்கள் காரில் இருந்த இருவரை பிடித்து, கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தனர். பின் வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம், ஜோலுார் பகுதியை சேர்ந்த மன்னாராம் மகன் தீபக்குமார் என்பதும், மற்றொரு நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட, 210 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, பெங்களூருவில் இருந்து, போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,' தீபக்குமார் கூறிய தகவல்படி, நாமக்கல் மாவட்டத்தில் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நண்பரான பிறகு பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து, சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளதார். மற்றொரு வாலிபர் குறித்தும், தப்பியோடிய இருவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us